என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ பொருள்களை அனுப்பியது இந்தியா
Byமாலை மலர்11 Dec 2021 8:35 PM GMT (Updated: 12 Dec 2021 1:24 AM GMT)
ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய அடிப்படையில் மத்திய அரசு மருந்து உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகின்றனர். அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. கடும் நிதி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடியில் சிக்கி ஆப்கன் தவிக்கிறது.
இதற்கிடையே, ஆப்கன் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. பாகிஸ்தான் வழியாக 50 ஆயிரம் டன் கோதுமையை லாரிகள் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மனிதநேய அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு விமானம் வாயிலாக இந்தியா நேற்று அனுப்பி வைத்தது. இவை ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...பிபின் ராவத் போன்றோரால் தேசியக் கொடி உயரப்பறக்கும் - ஜனாதிபதி பேச்சு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X