search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிபின் ராவத்
    X
    பிபின் ராவத்

    பிபின் ராவத் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

    முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பிபின் ராவத்தும், அவருடைய மனைவியும் விபத்தில் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடு தனது துணிச்சலான மைந்தர்களில் ஒருவரை இழந்து விட்டது. அவரது 40 ஆண்டுகால சுயநலம் இல்லாத தாயகப்பணி, வீரதீர சாகசம் நிறைந்தது. அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு


    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முப்படை தலைமை தளபதி, அவருடைய மனைவி, ராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கை தொடர்பு கொண்டு பேசி எனது வேதனையை பகிர்ந்து கொண்டேன்.

    இந்த துயரமான நேரத்தில், பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×