என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சோபியான் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்
Byமாலை மலர்8 Dec 2021 3:34 PM GMT (Updated: 8 Dec 2021 3:34 PM GMT)
கொல்லப்பட்ட 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சாக்-இ-சோலன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
மாலை வரை நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த அமிர் உசைன், ரயீஸ் அகமது, ஹசீப் யூசுப் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் மூன்று பேரும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உள்பட பல குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X