search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராணுவம் கண்காணிப்பு
    X
    ராணுவம் கண்காணிப்பு

    சோபியான் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

    கொல்லப்பட்ட 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சாக்-இ-சோலன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    மாலை வரை நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த அமிர் உசைன், ரயீஸ் அகமது, ஹசீப் யூசுப் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் மூன்று பேரும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உள்பட பல குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×