search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
    X
    உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

    உத்தரகாண்டில் விரைவில் விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படும்: முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

    உத்தரகாண்டில் உள்ள மகாராணா பிரதாப் விளையாட்டு கல்லூரியில் கேல் மகாகும்ப் போட்டியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் புஷ்கர் சிங் விரைவில் விளையாட்டு பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று ராய்ப்பூரில் உள்ள மகாராணா பிரதாப் விளையாட்டுக் கல்லூரியில் மாநில அளவிலான 2021-ம் ஆண்டுக்கான கேல் மகாகும்ப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

    பின்னர் இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது:-

    2021-க்கான மகாகும்ப் போட்டி

    உத்தரகாண்டில் விரைவில்  விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படும். நன்றாக விளையாடும் வீரர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.

    மேலும், பிரந்தியா ரக்ஷக் தளத்தின் தன்னார்வலர்களுக்கு சமூகப் பாதுகாப்புக்கான காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்படும். பணியின் போது மரணம் அடைந்தால் அவர்களது குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்
    Next Story
    ×