என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வங்கிகளுக்கு வரும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்தது
Byமாலை மலர்8 Dec 2021 3:01 AM GMT (Updated: 8 Dec 2021 3:01 AM GMT)
2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகும்.
புதுடெல்லி:
வங்கி அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேநேரம், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்படி, கடந்த 2017-ம் ஆண்டில் ரூ.17.95 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு ரூ.92.17 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகும்.
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின்படி, கடந்த 2016-17-ம் ஆண்டில் வங்கி அமைப்பில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 72 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது தொடர்ந்து சீராக குறைந்து, 2020-21-ம் ஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 ஆகியிருக்கிறது.
மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.
வங்கி அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேநேரம், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்படி, கடந்த 2017-ம் ஆண்டில் ரூ.17.95 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு ரூ.92.17 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகும்.
ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையின்படி, கடந்த 2016-17-ம் ஆண்டில் வங்கி அமைப்பில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 72 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது தொடர்ந்து சீராக குறைந்து, 2020-21-ம் ஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 ஆகியிருக்கிறது.
மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இத்தகவலை தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X