என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
அப்பாவி மக்கள் படுகொலை: உடல்களுக்கு நாகாலாந்து முதல்வர் இறுதி அஞ்சலி- நிவாரணம் அறிவிப்பு
Byமாலை மலர்6 Dec 2021 10:03 AM GMT (Updated: 6 Dec 2021 12:57 PM GMT)
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 15 பேரின் குடும்பங்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிவாரண தொகை அறிவித்துள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று நினைத்து பொது மக்கள் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாகாலாந்தில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிச் சடங்கு கிராம மக்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில், நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், நாகாலாந்து முதல்வர் நெய்ப்யூ ரியோ கூறியதாவது:-
நாகாலாந்து படுகொலை விவகாரம் தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார்.
மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.11 லட்சமும், மாநில அரசு தலா ரூ.5 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது.
நாகாலாந்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்றுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த சட்டம் நம் நாட்டின் பிம்பத்தையே கெடுத்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் பொதுமக்கள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அசாம் ரைபிள் முகாமில் பொதுமக்கள் வன்முறையில் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் சுட்டதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: பாராளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்கிறார்
இதையும் படியுங்கள்.. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: பாராளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்கிறார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X