search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தற்கொலை
    X
    தற்கொலை

    விரும்பியபடி கணவர் ஜாக்கெட் தைத்து தராததால் மனமுடைந்த பெண் தற்கொலை

    ஐதராபாத்தில் ஜாக்கெட் சரியாக தைக்கவில்லை என்பதற்காக பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஐதராபாத்:

    ஐதராபாத் அம்பெர்பெட் பகுதியில் உள்ள கோல்நாகா திருமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தையல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், விஜயலட்சுமிக்கு அவரது கணவர் ஜாக்கெட் ஒன்றை தைத்துக் கொடுத்துள்ளார். அது விஜயலட்சுமியின் விருப்பம்போல் இல்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி தனக்கு இந்த ஜாக்கெட் பிடிக்கவில்லை என்றும் வேறு ஒரு ஜாக்கெட் தைத்து தரும்படியும் கணவரிடம் கூறியுள்ளார்.

    அதற்கு ஸ்ரீநிவாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் ஸ்ரீநிவாஸ் வீட்டைவிட்டு வெளியேற சென்றுள்ளார்.

    பெண் தற்கொலை

    பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தைகள் வீடு திரும்பிய பின், தாயைத் தேடி படுக்கையறை கதவை தட்டியுள்ளனர். வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், இதுப்பற்றி ஸ்ரீநிவாஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வீட்டிற்கு விரைந்த ஸ்ரீநிவாஸ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயலட்சுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.

    பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விஜயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தான் விரும்பியபடி கணவர் ஸ்ரீநிவாஸ் ஜாக்கெட் தைத்து தராததால், மனமுடைந்து விஜயலட்சுமி தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

    இதையும் படியுங்கள்..  கென்யாவில் சோகம் - திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 31 பேர் பலி
    Next Story
    ×