search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யோகி ஆதித்யநாத்
    X
    யோகி ஆதித்யநாத்

    சாத்தியமற்றதை சாத்தியம் ஆக்குபவர் மோடி: யோகி ஆதித்யநாத்

    கிழக்கு உத்தரபிரதேசத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலை, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    கோரக்பூர் :

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 7-ந் தேதி கோரக்பூருக்கு வருகிறார். கிழக்கு உத்தரபிரதேசத்துக்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட உரத்தொழிற்சாலை, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

    உரத்தொழிற்சாலை கடந்த 1990-ம் ஆண்டு மூடப்பட்டது. அதை திறப்பதாக எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகள் அளித்தன. ஆனால் எதுவும் செய்யவில்லை. இதை வாக்குவங்கியாக கருதின. அவர்களுக்கு சாத்தியமற்றதை மோடி சாத்தியம் ஆக்கி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×