என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
விவாதம் இல்லாத பாராளுமன்ற ஜனநாயகம் வாழ்க: ப.சிதம்பரம் கிண்டல்
Byமாலை மலர்1 Dec 2021 2:37 AM GMT (Updated: 1 Dec 2021 2:37 AM GMT)
"அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக்கொள்ளும்போது விவாதம் தேவையில்லை" என்று விவாதத்தை மறுப்பதற்கான வேளாண்துறை மந்திரியின் பேச்சு குழப்பமாக இருந்தது.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயார் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாள், முதல் அமர்விலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. "அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக்கொள்ளும்போது விவாதம் தேவையில்லை" என்று விவாதத்தை மறுப்பதற்கான வேளாண்துறை மந்திரியின் பேச்சு குழப்பமாக இருந்தது. இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ளாதபோது விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபோதும் விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. எதுவாக இருந்தாலும் விவாதம் நடக்கவில்லை. விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயார் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாள், முதல் அமர்விலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. "அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக்கொள்ளும்போது விவாதம் தேவையில்லை" என்று விவாதத்தை மறுப்பதற்கான வேளாண்துறை மந்திரியின் பேச்சு குழப்பமாக இருந்தது. இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ளாதபோது விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபோதும் விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. எதுவாக இருந்தாலும் விவாதம் நடக்கவில்லை. விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X