search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    விவாதம் இல்லாத பாராளுமன்ற ஜனநாயகம் வாழ்க: ப.சிதம்பரம் கிண்டல்

    "அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக்கொள்ளும்போது விவாதம் தேவையில்லை" என்று விவாதத்தை மறுப்பதற்கான வேளாண்துறை மந்திரியின் பேச்சு குழப்பமாக இருந்தது.
    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயார் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாள், முதல் அமர்விலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. "அரசும், எதிர்க்கட்சியும் ஒப்புக்கொள்ளும்போது விவாதம் தேவையில்லை" என்று விவாதத்தை மறுப்பதற்கான வேளாண்துறை மந்திரியின் பேச்சு குழப்பமாக இருந்தது. இரு தரப்பினரும் ஒப்புக்கொள்ளாதபோது விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபோதும் விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது. எதுவாக இருந்தாலும் விவாதம் நடக்கவில்லை. விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×