என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
Byமாலை மலர்29 Nov 2021 9:11 PM GMT (Updated: 29 Nov 2021 9:11 PM GMT)
கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி கூறுகையில், ‘தடுப்பூசி போட மறுக்கும் ஆசிரியர்களால் மாணவர் நலன் பாதிக்கப்படும். சில ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பள்ளிக்கு வருகிறார்கள். இதனை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இதனால் 47 லட்சம் மாணவர்கள், மக்களின் நலன் கேள்விக்குறியாகி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டு வரும் நிலையில் மதத்தை காரணம் காட்டி தடுப்பூசி போட ஆசிரியர்கள் சிலர் மறுப்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X