search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    விளையாட்டு பள்ளி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு

    திருவனந்தபுரம் அருகே விளையாட்டு பள்ளி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை சஸ்பெண்டு செய்து கல்வி மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே விளையாட்டு பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1-ந்தேதி அருவிக்கரை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பு வகிக்கும் பிரதீப் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    தலைமை ஆசிரியர் செல்போனில் ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியானது. மேலும் கேரள மாநில கல்வி துறை மந்திரி சிவன்குட்டி கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து அவர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

    பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீப்பை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×