என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநிலத்துக்குள் தொடர்ந்து ஊடுருவி வருகிறார்கள்.
அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊடுருவிய பயங்கவாதிகள், 9 பாதுகாப்பு படையினரை சுட்டுக் கொன்றனர்.
இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு பூஞ்ச் மாவட்டம் பிம்பர்காலி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாக தெரிய வந்தது. உடனே அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.
அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினார்கள். அந்த பகுதியில் மேலும் பல பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படியுங்கள்...38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்- அரசாணை வெளியீடு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்