என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் பெருமை- மு.க.ஸ்டாலின் பேச்சு
Byமாலை மலர்23 Nov 2021 8:32 AM GMT (Updated: 23 Nov 2021 9:46 AM GMT)
தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை:
மாநாட்டின்போது, தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்கள் சார்பில் வந்திருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாடு நடத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். கடந்த 5 மாதங்களில் 3-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதே வேகத்தில் போனால், முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெறும்.
நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2,3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்.. கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.35,208 கோடிக்கு ஒப்பந்தம்
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை அந்தந்த மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து நடத்தி வருகின்றன. அந்த வகையில், இன்று கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநாட்டின்போது, தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை 2021 -யை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழ்நாடு அரசு மீது நம்பிக்கை வைத்து அனைத்து தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்கள் சார்பில் வந்திருப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சோதனையான காலத்திலும் தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். செப்டம்பரில் ஏற்றுமதியாளர் மாநாடு நடத்தப்பட்டது. மீண்டும் நவம்பர் மாதத்தில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். கடந்த 5 மாதங்களில் 3-வது முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இதே வேகத்தில் போனால், முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெறும்.
நாம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற லட்சிய இலக்கினை அடைவது வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் அளித்துக் கொண்டு வருகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் பரவலான வளர்ச்சி ஏற்படும் வகையில் 22 மாவட்டங்களுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2,3-ம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும்.
இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாட்டிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைவதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்.. கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.35,208 கோடிக்கு ஒப்பந்தம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X