search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேருந்துகள்
    X
    பேருந்துகள்

    மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் 26வது நாளாக நீடிப்பு

    பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் நஷ்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 9ம் தேதி போராட்டம் தீவிரமடைந்தது. அனைத்து டெப்போக்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டன. 

    அரசின் கோரிக்கையை ஏற்று சிலர் பணிக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2,632 தினக்கூலி தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுளள்து. 526 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2937 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. 

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக் இன்று 26வது நாளாக நீடிக்கிறது. மொத்தம் உள்ள 92,266 ஊழியர்களில் 6,943 பேர் மட்டுமே இன்று வேலை செய்தனர். இவர்களில் 4775 பேர் நிர்வாக ஊழியர்கள், 1725 பேர் பணிமனை பணியாளர்கள் மற்றும் 163 பேர் நடத்துனர்கள். ஸ்டிரைக் நீடிப்பதால் பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×