என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் பழமையான கட்டிடம் இடிந்து 6 பேர் பலி
Byமாலை மலர்21 Nov 2021 9:48 AM GMT (Updated: 21 Nov 2021 9:48 AM GMT)
ஆந்திராவில் பெய்த தொடர் கனமழை காரணமாக பழமையான கட்டிடம் இடிந்து 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருமலை:
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கதிரி பஜார் வீதியில் பழமையான கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கு நேற்று 6 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில் அனந்தபூரில் பெய்த தொடர் கனமழையால், அந்த கட்டிடம் திடீரென சரிந்து, அருகிலிருந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் 9 பேர் இருந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 9 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 9 பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் கதிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கி பலியான 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பயங்கர விபத்து குறித்து கதிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கதிரி பஜார் வீதியில் பழமையான கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கு நேற்று 6 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில் அனந்தபூரில் பெய்த தொடர் கனமழையால், அந்த கட்டிடம் திடீரென சரிந்து, அருகிலிருந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் 9 பேர் இருந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 9 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலமாக, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 9 பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் கதிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கி பலியான 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பயங்கர விபத்து குறித்து கதிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X