search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடியுடன் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்
    X
    பிரதமர் மோடியுடன் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

    பாராளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடி என்றாவது பங்கேற்று இருக்கிறாரா?- ப.சிதம்பரம் கேள்வி

    பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது, "சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு தனி நேரம் ஒதுக்க வேண்டும்" என்றும் பிரதமர் மோடி யோசனை கூறினார்.

    மோடியின் இந்த பேச்சுக்கு கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ‘பாராளுமன்றத்தில் தரமான விவாதங்களின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியது படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. தரமான விவாதங்களுக்கு தனி நேரத்தை ஒதுக்கவும் பரிந்துரைத்து இருக்கிறார். ஆனால், எனக்கு ஒரு கேள்வி. பிரதமர் மோடி எப்போதாவது பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்றிருக்கிறாரா ?’ என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×