search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்- மத்திய சுகாதார மந்திரி தகவல்

    மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்ட நிலவரம் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-

    * இந்தியாவில் இன்று (நேற்று) காலை 7 மணி நிலவரப்படி 113 கோடியே 68 லட்சத்து 79 ஆயிரத்து 685 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோசாக 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 2-வது டோசாக 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோசாக போடப்பட்ட 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81-ல் இருந்து, 2-வது டோசாக செலுத்தப்பட்ட 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604-ஐ கழிக்கிறபோது அது 37 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 477 ஆகும். இதுவே முதல் ‘டோஸ் ’ போட்டவர்கள் எண்ணிக்கை ஆகும். எனவே ஒரு ‘டோஸ் ’ போட்டவர்களைக் காட்டிலும் 2-வது ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.

    * நாட்டில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் சாதனை, முதல் முறையாக ஒரு ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    * நாட்டின் கூட்டு மனப்பாங்குக்கு பாராட்டுகள்.

    *ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்’ என்ற ஒரு மாத கால பிரசாரத்தின் முடிவில் நாட்டில் தகுதி வாய்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.
    Next Story
    ×