என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்- மத்திய சுகாதார மந்திரி தகவல்
Byமாலை மலர்17 Nov 2021 6:54 PM GMT (Updated: 17 Nov 2021 6:54 PM GMT)
மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்ட நிலவரம் குறித்து மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள்:-
* இந்தியாவில் இன்று (நேற்று) காலை 7 மணி நிலவரப்படி 113 கோடியே 68 லட்சத்து 79 ஆயிரத்து 685 ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் டோசாக 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 2-வது டோசாக 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோசாக போடப்பட்ட 75 கோடியே 57 லட்சத்து 24 ஆயிரத்து 81-ல் இருந்து, 2-வது டோசாக செலுத்தப்பட்ட 38 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 604-ஐ கழிக்கிறபோது அது 37 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 477 ஆகும். இதுவே முதல் ‘டோஸ் ’ போட்டவர்கள் எண்ணிக்கை ஆகும். எனவே ஒரு ‘டோஸ் ’ போட்டவர்களைக் காட்டிலும் 2-வது ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.
* நாட்டில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்தின் சாதனை, முதல் முறையாக ஒரு ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை விட 2 ‘டோஸ் ’ தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
* நாட்டின் கூட்டு மனப்பாங்குக்கு பாராட்டுகள்.
*ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்’ என்ற ஒரு மாத கால பிரசாரத்தின் முடிவில் நாட்டில் தகுதி வாய்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தகுதி வாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட்டு விடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றுபட்டு வெல்வோம்” என கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X