என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு
Byமாலை மலர்6 Nov 2021 4:55 AM GMT (Updated: 6 Nov 2021 6:00 AM GMT)
கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்தது. பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
ஆனால் 8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை மறுநாள் (8-ந்தேதி) முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்தது. பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை மறுநாள் (8-ந்தேதி) முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்... ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி லண்டனில் குடியேற திட்டமா?
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X