search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 பேரை கொன்ற லாரி
    X
    6 பேரை கொன்ற லாரி

    உ.பி.யில் தேநீர் கடைக்குள் புகுந்த சரக்கு லாரி: 6 பேர் பரிதாப பலி

    உத்தர பிரதேச மாநிலம் காசிபூரில் தேநீர் கடைக்குள் சரக்கு லாரி புகுந்த விபத்தில், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    உத்தர பிரதேச மாநிலம் காசிபூர், பவர்கோல் பகுதியில் உள்ள அஹிரௌலி கிராமத்தில் காசிபூர்- பள்ளியா சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத வகையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்து தேநீர் கடைக்குள் புகுந்தது.

    இதில் லாரி ஏறி, ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் கோபம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தய நாத் அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான உதவி அளிக்கப்படும் உறுதி அளித்துள்ளார்.

    சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×