search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காபூல் நதி நீரை ராமர் கோவில் கட்டுமான பணியிடத்தில் ஊற்றிய யோகி ஆதித்யநாத்
    X
    காபூல் நதி நீரை ராமர் கோவில் கட்டுமான பணியிடத்தில் ஊற்றிய யோகி ஆதித்யநாத்

    ஆப்கானிஸ்தான் சிறுமி அனுப்பிய காபூல் நதி நீர் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியில் சேர்ப்பு

    பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி காபூல் நதி நீரை, ராமர் கோவில் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் ஊற்றியதாக யோகி ஆதித்யநாத் கூறினார்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் காபூல் நதி நீரை அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமிக்கு வழங்குவதற்காக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, அந்த புனித நீரை பெற்றுக்கொண்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ‘ஜல அபிஷேகம்’ செய்து வணங்கினார்.

    பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில், காபூல் நதி நீரை கங்கை நீரில் கலந்து அதனை ராமர் கோவில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் ஊற்றியதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

    Next Story
    ×