என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது - ராகுல்காந்தி
Byமாலை மலர்31 Oct 2021 6:42 AM GMT (Updated: 31 Oct 2021 6:42 AM GMT)
பிரதமர் மோடி இப்போது விவசாயங்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவாவில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி தனது நெருங்கிய தொழில் அதிபர்களான 5 அல்லது 6 பேரின் நலன்களுக்கு மட்டுமே பணியாற்றி வருகிறார். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அந்த தொழில் அதிபர்களுக்கு சாதகமாக மட்டுமே பிரதமர் நடந்து கொள்கிறார்.
கோவா மாநிலத்தை தற்போது நிலக்கரி இறக்குமதி மையமாக மாற்றி இருக்கிறார்கள். மர்மமாக கோவா துறைமுகத்துக்கு நிலக்கரிகள் கொண்டு வரப்பட்டு அந்த பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைய செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக மீனவர்கள் பல்வேறு புகார்களை என்னிடம் தெரிவித்தனர். மோடிக்கு வேண்டிய தொழில் அதிபர்களுக்காகத்தான் நிலக்கரி இறக்குமதி இங்கு நடக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை தடுத்து நிறுத்துவோம். துறைமுகங்கள், விமான நிலையங்கள், விவசாயம், சில்லரை வர்த்தகம், டெலிபோன் என முக்கிய துறைகளில் அந்த 6 தொழில் அதிபர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் பணமதிப்பு இழப்பு திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் ஜி.எஸ்.டி. வரி கொண்டு வரப்பட்டது. இவை இரண்டிலும் சாதாரண மக்களும், சிறு தொழில்களை செய்பவர்களும் தான் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த இரு நிகழ்வுகளிலும் குறிப்பிட்ட அந்த தொழில் அதிபர்கள் ஆதாயம் அடைந்து இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. மூலம் சிறு மற்றும் குறு தொழில்கள், வர்த்தகங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
இப்போது விவசாயங்களை அழிக்கும் திட்டங்களையும் மோடி கொண்டு வந்து இருக்கிறார். அண்டை நாடான சீனா சமீபகாலங்களில் எல்லையில் ஆக்கிரமிப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலப்பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.
இந்திய மண்ணுக்குள் சீன ராணுவம் முகாமிட்டு இருக்கிறது. ஆனால் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் மோடி மறைக்கிறார். பொய்யான தகவல்களை கூறுகிறார்கள்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
இதையும் படியுங்கள்...நவம்பர் 5-ந்தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X