என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தல் - 104 வயது வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
Byமாலை மலர்30 Oct 2021 7:48 PM GMT (Updated: 30 Oct 2021 7:48 PM GMT)
இந்தியா விடுதலையடைந்து 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் நபராக வாக்களித்து, தொடர்ந்து 33-வது முறையாக நேற்று வாக்களிக்க வந்த 104 வயது நபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷிம்லா:
இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பா.ஜ.க. கட்சிகள் இடையே பலப்பரீட்சை நிலவி வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் முதல் ஓட்டு போட்டவரும், மூத்த வாக்காளரான 104 வயதான ஷியாம் சரண் நேகி, நேற்று தனது முக்கிய கடமையான வாக்கை பதிவு செய்தார்.
இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மாண்டி மக்களவை தொகுதியின் கின்னார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஷியாம் சரண் நேகி தனது வாக்கை பதிவு செய்தார். மூத்த வாக்காளரான அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது கடமையை சரிவர செய்யவேண்டும் என்றார்.
இவர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் வாக்களித்துள்ளார். அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நேகி தனது வாக்கை தவறாமல் பதிவு செய்துள்ளார். அவர் இதுவரை 16 பாராளுமன்ற தேர்தல்களிலும், 14 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X