search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பசும்பொன் தேவர் ஜெயந்தி- பிரதமர் மோடி புகழாரம்

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.



    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “தேவர் ஜெயந்தியின் சிறப்பு நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறுகிறேன். மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், தனது வாழ்க்கையை பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டவர்” என்று பதிவிட்டிருந்தார்.

    Next Story
    ×