என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
31ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளை அறிவித்தது மேற்கு வங்காள அரசு
Byமாலை மலர்29 Oct 2021 1:53 PM GMT (Updated: 29 Oct 2021 1:53 PM GMT)
திரையரங்குகள், ஸ்டேடியங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்டுகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் 70 சதவீதம் நபர்களை அனுமதிக்கலாம்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி முதல் கூடுதல் தளர்வுகளை மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களையும் நவம்பர் 16ம்தேதி திறக்கலாம்.
உள்ளூர் ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம். திரையரங்குகள், ஸ்டேடியங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரன்டுகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் 70 சதவீதம் நபர்களை அனுமதிக்கலாம்.
காளி பூஜை, தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 2 முதல் 5ம் தேதி வரையிலும், சாத் பூஜைக்காக நவம்பர் 10ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X