என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்துவிட்டது- புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Byமாலை மலர்29 Oct 2021 1:07 PM GMT (Updated: 29 Oct 2021 1:07 PM GMT)
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
புதுடெல்லி:
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 46.
புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமாருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‘புனித் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்துவிட்டது. புனித் ராஜ்குமார் திறமைக்காகவும், ஆளுமைக்காகவும் வருங்கால தலைமுறையினரால் நினைவு கூறப்படுவார்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X