என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நீட்டிப்பு
Byமாலை மலர்29 Oct 2021 4:03 AM GMT (Updated: 29 Oct 2021 6:36 AM GMT)
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சக்திகாந்த தாஸ். மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளரான இவர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ் 1980-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானவர். தமிழக கேடர் ஆபீஸராகப் பணியாற்றியவர். மத்திய அரசு பணிகளுக்கு 2008-ம் ஆண்டு சென்ற இவர், அதற்கு முன்பு தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
இந்தநிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10-ம் தேதியுடன் முடிவிருந்த நிலையில் மத்திய அரசு பதவிகாலத்தை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... பெங்களூரு: ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து பாடி அசத்தல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X