என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்யன் கான் வழக்கு: முக்கிய சாட்சியாக கருதப்படும் கிரண் கோசாவி புனே போலீசாரால் கைது
Byமாலை மலர்28 Oct 2021 4:24 AM GMT (Updated: 28 Oct 2021 5:13 AM GMT)
ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த 2-ந்தேதி தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் என்.சி.பி. குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கிரண் கோசாவி கருதப்படுகிறார். கடந்த இரண்டு நாட்களாக மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. மனு குறித்து நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை.
இந்த நிலையில் புனே போலீசார் கிரண் கோசாவியை கைது செய்துள்ளது. 2018-ல் பண மோசடியில் ஈடுபட்டதாக கிரண் கோசாவி மீது ஏற்கனவே வழக்கு உள்ளது. 2019-ம் ஆண்டு போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
அதன்பின் சொகுசு கப்பல் போதைப்பொருள் சோதனையின் என்.சி.பி.யின் சாட்சியாக கருதப்படும் நிலையில், பொதுவெளியில் தென்பட்டதால் புனே போலீசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 14-ந்தேதி அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X