என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
4 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 15 ஆயிரத்துக்குள் சரிவு
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,306 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
4 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று மீண்டும் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 774 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 8,538, மராட்டியத்தில் 1,410, தமிழ்நாட்டில் 1,127 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மேலும் 443 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் நேற்று 71 பேர் மற்றும் விடுபட்ட பலி எண்ணிக்கை என மொத்தம் 363 மரணங்கள் அடங்கும்.
மொத்த பலி எண்ணிக்கை 4,54,712 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,40,016 பேர் அடங்குவர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 18,762 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 67 ஆயிரத்து 367 ஆக உயர்ந்தது.
தற்போது 1,67,695 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 239 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 12,30,720 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 27 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நாடு முழுவதும் நேற்று 9,98,397 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 60 கோடியே 7 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்