என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்டிகை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்- மம்தா வலியுறுத்தல்
Byமாலை மலர்25 Oct 2021 5:27 AM GMT (Updated: 25 Oct 2021 6:21 AM GMT)
கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொல்கத்தா:
கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: -
மேற்கு வங்காளத்தில் துர்கை பூஜை முடிந்த பிறகு, கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காளி பூஜை, தீபாவளி, சத் பூஜை மற்றும் ஜகதாத்திரி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால், கொரோனா தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூடும்படி முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசத்தை தவிர மற்ற பாதுகாப்பு நெறிமுறைகளையும் மக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இதைத்தவிர, கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், அனைத்து பகுதிகளை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: -
மேற்கு வங்காளத்தில் துர்கை பூஜை முடிந்த பிறகு, கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காளி பூஜை, தீபாவளி, சத் பூஜை மற்றும் ஜகதாத்திரி பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால், கொரோனா தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூடும்படி முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசத்தை தவிர மற்ற பாதுகாப்பு நெறிமுறைகளையும் மக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.
இதைத்தவிர, கொரோனா தொற்றுடன் வடக்கு வங்காளத்தில் உள்ள பல பகுதிகளில் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், அனைத்து பகுதிகளை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...காங்கிரசுக்கு ‘சீட்’ கொடுத்தால் டெபாசிட் கூட வாங்காது: லல்லுபிரசாத் யாதவ்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X