என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைந்தார்
Byமாலை மலர்24 Oct 2021 11:34 AM GMT (Updated: 24 Oct 2021 11:34 AM GMT)
மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 27 எம்எல்ஏக்கள் வெளியேறி உள்ளனர்.
போபால்:
மத்திய பிரதேசத்தில் மூன்று சட்டசபை தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்துள்ளார். கார்கோன் மாவட்டம் பெடியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான, அமைச்சர் கமல் படேல் ஆகியர் முன்னிலையில் சச்சின் பிர்லா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு முதல்வர் சிவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
2020 மார்ச் மாதம் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் கமல் நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. சிவராஜ் சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அதன்பின்னர் மேலும் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். தற்போது 27வது எம்எல்ஏவாக சச்சின் பிர்லா வெளியேறி உள்ளார்.
பர்வா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சச்சின் பிர்லா, தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களுடன பேச சச்சின் பிர்லா மறுத்து, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X