search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்கப்பட்ட கார்
    X
    தாக்கப்பட்ட கார்

    திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் கார் மீது தாக்குதல்

    தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் பணியாளர்களுடன் சுஷ்மிதா தேவ் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுஷ்மிதா தேவ், திரிபுரா மாநிலத்தில் கட்சியின் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகிறார். தேர்தல் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் பணியாளர்களுடன் சுஷ்மிதா தேவ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒரு கும்பல் சுஷ்மிதா தேவின் காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. ஐபேக் நிறுவன ஊழியர்களும் தாக்கப்பட்டனர். 

    இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    அதில், சுஷ்மிதா தேவ் மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மற்ற 10 தொண்டர்கள் அம்தாலி பஜாரில் பாஜகவினரால் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும்,  வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
    Next Story
    ×