search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,786 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 15,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 231 பேர் உயிரிழந்துள்ளனர்.
    இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் புதிதாக மேலும் 15,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 231 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,75,745 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    நேற்று 13,24,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 59,70,66,481 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
    Next Story
    ×