என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷாருக்கான் வீட்டிற்கு சென்றது ஏன்?: என்.சி.பி. மண்டல அதிகாரி விளக்கம்
Byமாலை மலர்21 Oct 2021 11:44 AM GMT (Updated: 21 Oct 2021 11:44 AM GMT)
சிறைச்சாலை சென்று மகனை பார்த்து வந்த நிலையில், அதிகாரிகள் ஷாருக்கானின் மும்பை வீட்டில் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.
சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கினார். ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று ஆர்தர் பகுதியில் உள்ள சிறைக்கு சென்று தனது மகனை ஷாருக்கான் சந்தித்தார்.
ஷாருக்கான் சிறைக்கு சென்று திரும்பியதும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மும்பை மன்னட் பகுதியில் உள்ள ஷாருக்கான் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது ஷாருக்கான் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும், ஷாருக்கானிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் போதைபொருள் தடுப்புப்பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில் ‘‘என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யன் கான் தொடர்பான சில ஆவணங்களை எடுப்பதற்காக ஷாருக்கானின் வீட்டிற்கு சென்றனர். மன்னாட் வீட்டில் சோதனை ஏதும் நடத்தப்படவில்லை’’ என்றார்.
‘‘ஷாருக்கான் வீட்டில் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நடைமுறை தேவையின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கு சென்றிருந்தோம்’’ என என்.சி.பி. டிடிஜி அஷோக் முத்தா ஜெயின் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X