என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷாருக்கான் வீட்டில் போதைபொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
Byமாலை மலர்21 Oct 2021 7:36 AM GMT (Updated: 21 Oct 2021 7:36 AM GMT)
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், ஷாருக்கான் வீட்டில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3-ந்தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் வழங்கப்படாத நிலையில், சிறையில் இருக்கும் ஆர்யன் கானை இன்று காலை ஷாருக்கான் சென்று சந்தித்தார். சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன் கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மும்பை மன்னாட்டில் உள்ள ஷாருக்கான் வீட்டில் போதைபொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது ஷாருக்கானிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X