என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் 4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்வு- புதிதாக 18,454 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்21 Oct 2021 6:46 AM GMT (Updated: 21 Oct 2021 7:38 AM GMT)
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 82, மகாராஷ்டிராவில் 21 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 160 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,52,811 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் நேற்று சற்று உயர்ந்து 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 27 ஆயிரத்து 450 ஆக உயர்ந்தது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு 7 ஆயிரத்துக்குள் இருந்த நிலையில், நேற்று மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 82, மகாராஷ்டிராவில் 21 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 160 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,52,811 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,886 பேர் அடங்குவர்.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 17,561 பேர் நலம் பெற்றனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 95 ஆயிரத்து 808 ஆக உயர்ந்தது. தற்போது 1,78,831 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 59.57 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் நேற்று சற்று உயர்ந்து 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 27 ஆயிரத்து 450 ஆக உயர்ந்தது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பாதிப்பு 7 ஆயிரத்துக்குள் இருந்த நிலையில், நேற்று மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அங்கு புதிதாக 11,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர மகாராஷ்டிராவில் 1,825, தமிழ்நாட்டில் 1,170, மிசோரத்தில் 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 82, மகாராஷ்டிராவில் 21 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 160 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,52,811 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,39,886 பேர் அடங்குவர்.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 17,561 பேர் நலம் பெற்றனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 95 ஆயிரத்து 808 ஆக உயர்ந்தது. தற்போது 1,78,831 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, இதுவரை 59.57 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று மட்டும் 12,47,506 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X