என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்
Byமாலை மலர்20 Oct 2021 10:07 AM GMT (Updated: 20 Oct 2021 10:12 AM GMT)
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க தேசிய புலனாய்வு முகமை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது நடக்கும் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ட்ராகட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆதரவு அளிப்பவர்களை அடிக்கடி சோதனை நடத்தி கைது செய்கிறது.
மேலும் இதுதொடர்பாக பயங்கரவாதிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீபகாலமாக காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் காஷ்மீரில் இன்று 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் தலைநகர் ஸ்ரீநகரில் 4 இடங்களிலும், பாராமுல்லா மாவட்டத்தில் 2 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. சோதனைகள் நடந்துவரும் இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது நடக்கும் என்கவுண்டரில் பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ட்ராகட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆதரவு அளிப்பவர்களை அடிக்கடி சோதனை நடத்தி கைது செய்கிறது.
மேலும் இதுதொடர்பாக பயங்கரவாதிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீபகாலமாக காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் காஷ்மீரில் இன்று 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் தலைநகர் ஸ்ரீநகரில் 4 இடங்களிலும், பாராமுல்லா மாவட்டத்தில் 2 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. சோதனைகள் நடந்துவரும் இடங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X