என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை- உத்தர பிரதேசத்தில் பரபரப்பு
Byமாலை மலர்18 Oct 2021 9:37 AM GMT (Updated: 18 Oct 2021 9:37 AM GMT)
வழக்கறிஞர் பூபேந்தர் சிங், யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாகவும், திடீரென பலத்த சத்தம் கேட்டபிறகு அவர் தரையில் விழுந்தாகவும் கூறப்படுகிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வழக்கறிஞர் பெயர், பூபேந்திர சிங். அவர் நீதிமன்ற கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அருகில் நாட்டுத் துப்பாக்கி கிடந்தது.
வழக்கறிஞர் பூபேந்தர் சிங் அந்த தளத்தில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தாகவும், திடீரென பலத்த சத்தம் கேட்டபிறகு அவர் தரையில் விழுந்தாகவும் கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஆனந்த் கூறுகையில், ‘வழக்கறிஞர் பூபேந்திர தனியாக இருந்ததாகத் தெரிகிறது. சம்பவம் நடந்தபோது அவரை சுற்றி வேறு யாரும் காணப்படவில்லை. தடயவியல் குழு தடயங்களை சேகரித்து ஆய்வு செய்கிறது. கொலைக்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் தெளிவாக தெரியவில்லை’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X