search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் மறியல்
    X
    ரெயில் மறியல்

    லக்கிம்பூர் கேரி வன்முறை- விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

    லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 4 விவசாயிகள், 2 பாஜகவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தையடுத்து மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

    ரெயில் மறியல்

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய 
    ரெயில் மறியல்
     போராட்டம் நடத்த, சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×