என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லக்கிம்பூர் கேரி வன்முறை- விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
Byமாலை மலர்18 Oct 2021 5:07 AM GMT (Updated: 18 Oct 2021 8:09 AM GMT)
லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுடெல்லி:
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதில் விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 4 விவசாயிகள், 2 பாஜகவினர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டுமென்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய ரெயில் மறியல் போராட்டம் நடத்த, சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... 3 மாதங்களுக்கு பிறகு சதுரகிரி மலை ஏற இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X