என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சித்து எழுதிய பரபரப்பு கடிதம்
Byமாலை மலர்17 Oct 2021 11:13 PM GMT (Updated: 17 Oct 2021 11:13 PM GMT)
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வேன் என அம்மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. வரவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பஞ்சாப் மாநில தலைவர் சித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 4 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், வரும் 2022-ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கான 13 அம்சங்கள் கொண்ட விவரங்களை விளக்கியுள்ளார். இதுவே மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் போதைப்பொருள் விவகாரம், வேளாண் விவகாரம், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளதுடன், அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...காஷ்மீரிகளை இழிவுபடுத்தவே படுகொலைகள் செய்யப்படுகின்றன - பரூக் அப்துல்லா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X