என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் கூடாரம்: மத்திய பிரதேச முதல்- மந்திரி கிண்டல்
போபால்:
மத்திய பிரதேச முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாநில இடைத்தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளார். புர்கான்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தற்போது நிலையில்லாத கட்சியாக இருக்கிறது. அந்த கட்சிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை.
சோனியா காந்தியை தற்காலிக தலைவராக நியமித்தார்கள். ஆனால் அவர் செயல்படாமல் இருக்கிறார். ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கட்சியில் எந்த பதவியும் அவருக்கு இல்லை.
ஆனால் முதல்- மந்திரிகளை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளையும் அவர்தான் எடுக்கிறார். பஞ்சாபில் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங் சுமூகமாக ஆட்சியை நடத்தி வந்தார்.
திடீரென அவரை மாற்றிவிட்டார்கள். சித்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை கட்சியில் வற்புறுத்தி பிடித்து வைத்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் இதே பிரச்சினை இருக்கிறது. ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
சத்தீஸ்கரில் முதல்- மந்திரி பூபேஷ்பாகலுக்கும், தியோ சிங்குக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தை மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் தனது மகனை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்கி தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.
மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சர்க்கஸ் கூடாரம் போல இருக்கிறது. யார், யார் எப்படி செயல்படுகிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
உலகத்தில் எங்காவது தலைவர் இல்லாத கட்சி உண்டா? ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் தலைவர் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குடும்ப கூட்டமாக நடந்து முடிந்துள்ளது’’ என்று கூறினார்.
இதையும் படியுங்கள்... பெட்ரோல்-டீசல் வாங்குவதற்காக இந்தியாவிடம் ரூ.3,600 கோடி கடன் கேட்கும் இலங்கை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்