search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா
    X
    சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா

    அடுத்த வாரம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் - மன்சுக் மாண்டவியா

    இந்தியாவில் இதுவரை 69 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 131 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில்  97.25 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக தொடர்வதால் மக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை அடுத்த வாரம் 100 கோடியை கடக்கும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியதும் துறைமுகங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என மன்சுக் மாண்டவியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×