search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தடுப்பூசி முதல் டோஸ் - காஷ்மீரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 சதவீதம் செலுத்தி சாதனை

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
    ஜம்மு:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றன. பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், 20 மாவட்டங்களை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி 100 சதவீதம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×