என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூ.5000 -கேரள அமைச்சரவை முடிவு
Byமாலை மலர்13 Oct 2021 5:24 PM GMT (Updated: 13 Oct 2021 5:34 PM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு எங்கு இறந்தாலும், அவர்கள் மாநிலத்தில் குடியேறியவர்களாக இருந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள், சமூக நலன், நல நிதி அல்லது பிற ஓய்வூதியங்கள் பெற்றிருந்தாலும் இந்த நிதி உதவி பெற தகுதி உடையவர்கள்.
மாநிலத்திற்குள் அல்லது வெளியில் அல்லது வெளிநாட்டில் இறந்தாலும், அவர்கள் மாநிலத்தில் குடியேறியவர்களாக இருந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X