என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனை
Byமாலை மலர்13 Oct 2021 3:33 AM GMT (Updated: 13 Oct 2021 3:33 AM GMT)
கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு பயாலஜிக்கல்-இ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
புதுடெல்லி:
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம். இதன் 3-வது கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
இதை தனது விண்ணப்பத்தில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் சுட்டிக்காட்டி, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.
ஏற்கனவே கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரண்டில் எந்த தடுப்பூசியின் 2 ‘டோஸ்’களையும் செலுத்திக்கொண்டவர்கள் இந்த கோர்பேக்சஸ் தடுப்பூசியை 3-வது பூஸ்டர் டோசாக போட்டுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
இந்த தடுப்பூசியை 18 முதல் 80 வயதானவர்களுக்கு செலுத்தலாம். இதன் 3-வது கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், பலரது உடலில் அதன்மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து வருவதால், சில நாடுகள் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடத்தொடங்கி உள்ளன. வேறு சில நாடுகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
இதை தனது விண்ணப்பத்தில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் சுட்டிக்காட்டி, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனைக்கு விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இதற்கான அனுமதி கிடைத்து விடும் எனவும், அதன்பின்னர் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X