search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா

    கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 73 ஆயிரத்து 442 ஆக உயர்ந்துள்ளது.
    திருவனந்தபுரம்: 

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  6,996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 16,576 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,01,419 ஆக குறைந்துள்ளது.  

    கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 73 ஆயிரத்து 442 ஆக  உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 66,702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26,342 ஆக  உயர்ந்துள்ளது. 


    Next Story
    ×