என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் பாஜகவினர் கொல்லப்பட்டது எதிர்வினை... விவசாய சங்க தலைவர் சர்ச்சை கருத்து
Byமாலை மலர்9 Oct 2021 5:12 PM GMT (Updated: 9 Oct 2021 5:12 PM GMT)
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வன்முறை வெடித்தது. இதில் பாஜகவைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. வன்முறையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்திவருகின்றனர். தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விவசாய சங்க தலைவர்கள் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் பேசுகையில், லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதையடுத்து, வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கொல்லப்பட்டது எதிர்வினை என்று கூறினார். பாஜகவினரை கொன்றவர்களை குற்றவாளிகளாக கருதவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
லக்கிம்பூர் சம்பவத்திற்கு எதிராக அமைதியான வழியில் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ராகேஷ் திகாயித்தின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X