என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரோமணி அகாலி தளம் தலைவர் சென்ற கார் மீது செருப்பு வீசிய விவசாயிகள்
Byமாலை மலர்9 Oct 2021 10:56 AM GMT (Updated: 9 Oct 2021 12:38 PM GMT)
சுக்பீர் சிங் பாதல் செல்லும் பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர்.
ஜலந்தர்:
பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு மத்தியில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ‘100 நாட்களில் 100 தொகுதிகளில் யாத்திரை’ என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கினார். இதனால் அவருக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்புகின்றனர். கருப்புக் கொடி காட்டுகின்றனர்.
#WATCH | Farm laws protesters throw a shoe at the vehicle of Shiromani Akali Dal president Sukhbir Singh Badal in Jalandhar, Punjab pic.twitter.com/LIpyiURYRs
— ANI (@ANI) October 9, 2021
இந்நிலையில், ஜலந்தரில் இன்று சுக்பீர் சிங் பாதல் பயணம் மேற்கொண்டார். அவர் செல்லும் பாதைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையும் மீறி, சுக்பீர் சிங் பாதல் சென்ற கார் மீது, போராட்டக்காரர்கள் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X