search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    லக்கிம்பூர் வன்முறை- உ.பி. அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

    கொடூரமான கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா? உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந்தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார்.

    லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்முறை தொடர்பாக உத்தர பிரதேச அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். கொடூரமான கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா?  உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

    Next Story
    ×