என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லக்கிம்பூர் வன்முறை- உ.பி. அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி
Byமாலை மலர்8 Oct 2021 10:04 AM GMT (Updated: 8 Oct 2021 11:18 AM GMT)
கொடூரமான கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா? உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூரில் கடந்த 3-ந்தேதி பா.ஜ.க.வினர் சென்ற கார், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோதியது. இதில் இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார்.
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. வன்முறை சம்பவம் குறித்த அறிக்கையை உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்முறை தொடர்பாக உத்தர பிரதேச அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். கொடூரமான கொலை வழக்கை இப்படித்தான் கையாள்வதா? உத்தரபிரதேச அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
இதையும் படியுங்கள்... அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X