என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் வகுப்பை கவனிக்காத குழந்தைக்கு சூடு வைத்த தாய்
Byமாலை மலர்8 Oct 2021 5:42 AM GMT (Updated: 8 Oct 2021 5:42 AM GMT)
ஆன்லைன் வகுப்பை கவனிக்கவில்லை என தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்களுடன் 6 வயது குழந்தை சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டது.
குழந்தையின் கால் மூட்டின் கீழ்ப்பகுதிகள், அந்தரங்க உறுப்புகள் மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கரண்டியால் சூடு வைக்கப்பட்டு இருந்தது.
குழந்தைக்கு முதல் உதவி மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் இதுகுறித்து குமாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதில், குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் குழந்தை சரியாக அதை கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தாய் குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய கரண்டியால் குழந்தையின் உடல் முழுவதும் சூடு போட்டுள்ளார். இதனால் குழந்தை அலறி துடித்தது.
குழந்தையை அக்கம்பக்கத்தினர் மற்றும் குழந்தையின் தாய்மாமன் ஆகியோர் மீட்டு குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தது தெரியவந்தது. தற்போது குழந்தை, குழந்தைகள் நல அதிகாரிகள் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் தாய் மாமன் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.
அந்த பெண்ணை அவரது கணவன் கைவிட்டு சென்றதும் அதில் இருந்து அடிக்கடி குழந்தையை மோசமான முறையில் தாக்கி வருவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்களுடன் 6 வயது குழந்தை சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டது.
குழந்தையின் கால் மூட்டின் கீழ்ப்பகுதிகள், அந்தரங்க உறுப்புகள் மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கரண்டியால் சூடு வைக்கப்பட்டு இருந்தது.
குழந்தைக்கு முதல் உதவி மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர்கள் இதுகுறித்து குமாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விரைந்து வந்த குமாரமங்கலம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். குழந்தைகள் நல அதிகாரிகள் குழந்தைக்கு கவுன்சிலிங் அளித்து பேசினர். அப்போது அந்த குழந்தை, தன் உடலில் தாயார் கரண்டியால் சூடு வைத்தது குறித்து மழலை குரலில் கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தாயிடம் விசாரணை செய்தனர்.
அதில், குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் குழந்தை சரியாக அதை கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தாய் குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய கரண்டியால் குழந்தையின் உடல் முழுவதும் சூடு போட்டுள்ளார். இதனால் குழந்தை அலறி துடித்தது.
குழந்தையை அக்கம்பக்கத்தினர் மற்றும் குழந்தையின் தாய்மாமன் ஆகியோர் மீட்டு குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தது தெரியவந்தது. தற்போது குழந்தை, குழந்தைகள் நல அதிகாரிகள் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையின் தாய் மாமன் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.
அந்த பெண்ணை அவரது கணவன் கைவிட்டு சென்றதும் அதில் இருந்து அடிக்கடி குழந்தையை மோசமான முறையில் தாக்கி வருவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... முதல் மந்திரியில் இருந்து பிரதமர் வரை - 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X