search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி
    X
    தீபாவளி

    பண்டிகை காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள்- மத்திய அரசு அறிவுறுத்தல்

    கொரோனா அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதால் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு கொரோனா 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவர போராடிக்கொண்டிருக்கிறது. தற்போது தொற்று பரவல் ஆஸ்பத்திரி சேர்க்கை, இறப்புகள் கட்டுக்குள் உள்ளன. இருப்பினும் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் மக்கள் பொது இடங்களில் பண்டிகைகளின் பெயரால் கூடுகிற சூழல் ஏற்படும். இது கொரோனா பரவல் எழுச்சி பெற வாய்ப்பு ஆகி விடலாம்.

    இதையொட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா 2-வது அலை இன்னும் ஓயவில்லை. தற்போது பரவல் தட்டையாக உள்ளது. ஆனாலும் தினமும் சுமார் 20 ஆயிரம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    கொரோனா வைரஸ்

    தற்போதைய சூழலை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது. தொற்றுநோய் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது, நாம் கவனமாக இல்லாவிட்டால், விரும்பத்தகாத நிலைமை ஏற்பட்டு விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

    பண்டிகை காலத்திலும், திருமண காலத்திலும் தொற்று பரவல் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இந்த மாதத்திலும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

    கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்லாதீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். வீடுகளிலேயே இருங்கள். பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்.

    9 மாநிலங்களில் 34 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறது.

    மிசோரம், கேரளா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் வாராந்திர பாதிப்பு 5 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

    கேரளாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற 4 மாநிலங்களில் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

    12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 28 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் உள்ளது.

    நாட்டின் மக்கள் தொகையில் 71 சதவீதத்தினர் ஒரு ‘டோஸ்’ தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 27 சதவீதம் பேர் 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் எழுச்சி பெற்றாலும், அதை சந்திக்கிற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கொரோனா நோயாளிகளுக்காக தற்போது நாடு முழுவதும் 8.36 லட்சம் ஆஸ்பத்திரி படுக்கைகளும், அர்ப்பணிக்கப்பட்ட பராமரிப்பு மையங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் தனிமைப்படுக்கைகளும் உள்ளன. 4.86 லட்சம் ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகள், 1.36 லட்சம் தீவிர சிகிச்சை படுக்கைகள் இருக்கின்றன.

    தினந்தோறும் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் புதிய பாதிப்புகள் வந்தாலும், சந்திக்க தயாராக இருக்கிறோம். நாட்டில் தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


    Next Story
    ×